ஆனால் மருத்துவமனைக்கு சென்ற பிறகு மனைவி மற்றும் குழந்தை மீண்டும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த கணவன் உமாபதி மப்பேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன உமாபதியின் மனைவி மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் அடுத்த விடையூர் காரணி பகுதியைச் சேர்ந்தவர் ஆதி(50). இவரது மகள் மேனிகா(28). இவர் திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்லூரியில் லேப் டெக்னீசியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 19ம் தேதி காலை 7 மணி அளவில் வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆதி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மேனிகாவை தேடி வருகின்றனர்.