திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வழக்கறிஞர் தற்கொலை

அம்பத்தூர்: அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ்(28), வழக்கறிஞர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கோபித்துக்கொண்டு, கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சதீஷ் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ், நேற்று முன்தினம் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து மனைவி மற்றும் குடும்பத்தினர், சதீஷின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, சதீஷ் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை