அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. பிரதீஷ் கைலாசுக்கும், பிரியங்கா குமாரிக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரம் அடைந்த பிரதீஷ் கைலாஷ், மனைவி பிரியங்கா குமாரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு ரயில் மூலம் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற கைலாஷை மணிமங்கலம் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.