இந்நிலையில் தனது தந்தையிடம் அவரது மகன் யஷ்வந்த் லோதி சைக்கிள் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நிர்பத் லோகி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து, தனது மகனை வெட்டிக் கொன்றார். மேலும் தனது மனைவியையும், மகளையும் ெவட்ட முயன்றார். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால், அங்கிருந்து தப்பியோடி அவரது பண்ணை வீட்டில் தஞ்சடைந்தார். தகவலறிந்த போலீசார், சிறுவன் யஷ்வந்த் லோதியின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிர்பந் லோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.