Sunday, June 30, 2024
Home » தகாத உறவால் மனைவி மீது சந்தேகம்: சைக்கிள் கேட்ட 12 வயது மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

தகாத உறவால் மனைவி மீது சந்தேகம்: சைக்கிள் கேட்ட 12 வயது மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை

by Mahaprabhu

போபால்: மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தனது 12 வயது மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் சாகர் அடுத்த காண்டி பகுதியை சேர்ந்த நிர்பத் லோதி என்பவர் தனது மனைவி, மகன் யஷ்வந்த் லோதி (12), மகளுடன் வசித்து வருகிறார். தனது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன் – மனைவிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது. தனது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளும் தன்னுடையது அல்ல என்றும் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் தனது தந்தையிடம் அவரது மகன் யஷ்வந்த் லோதி சைக்கிள் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நிர்பத் லோகி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து, தனது மகனை வெட்டிக் கொன்றார். மேலும் தனது மனைவியையும், மகளையும் ெவட்ட முயன்றார். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால், அங்கிருந்து தப்பியோடி அவரது பண்ணை வீட்டில் தஞ்சடைந்தார். தகவலறிந்த போலீசார், சிறுவன் யஷ்வந்த் லோதியின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிர்பந் லோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fourteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi