பூந்தமல்லி அருகே கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி கைது: தவறான சிகிச்சையால் உயிரிழந்தாக புகார், உடலை சாலையில் வைத்து போராட்டம்

பூந்தமல்லி: கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வெட்டப்பட்டவர் உயிரிழந்தாக கூறி, உடலை சாலையில் வைத்து சாலை மறியிலில் ஈடுபட்டனர். குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியை சேர்ந்தவர் முருகன்(41). அதே பகுதியில் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவருக்கு, கலாவதி (35) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தம்பதி, கடந்த வாரம் மகளின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அப்போது, கணவன் – மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த கலாவதி, வீட்டின் சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து வீசியதில், முருகனின் காலில் பட்டு ரத்தம் வடிந்ததுள்ளது. இதனைபார்த்த கலாவதி அங்கிருந்து ஓடிவிட்டார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர், வலியால் துடித்த முருகனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முருகன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, முருகன் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்றத்தூர் போலீசார், இறந்த முருகனின் உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், கலாவதியை கைது செய்து விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனையடுத்து, முருகனின் உடலை எடுத்துச்சென்று அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.  மேலும், கலாவதி வெட்டியதால் முருகன் இறக்கவில்லை என்றும், அவர் இறப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கலாவதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை