கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், கடந்த 22ம்தேதி மனைவி சரிதாவை செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு விட்டு எடுத்தவாய்நத்தம் கிராமத்திற்கு சுரேஷ் வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றிருந்த இரு மகன்களையும் காலை 11 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் இருவரையும் தலையணையை நெஞ்சில் வைத்து அமுக்கி மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் சடலங்களை தூக்கில் மாட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.
மீண்டும் கடப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கட்டையால் மாமியாரை தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து வேலை முடிந்து சுரேஷின் தந்தை பழனி, தாய் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தனது 2 பேரன்களும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து தந்தை சுரேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், நாங்கள் பிரிந்துவிட்ட நிலையில் மகன்கள் கஷ்டப்படக்கூடாது என்று தலையணையை நெஞ்சில் வைத்து அமுக்கி கொலை செய்ததாக சுரேஷ் கூறியுள்ளார். இதையடுத்து கச்சிராயபாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே ஊரக்கரையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பிரேமா. ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். 2வது மகள் பிரியங்கா (22), கடந்த ஓராண்டுக்கு முன் சீனுபிரசாத் (24) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். கடந்த 21ம் தேதி பிரியங்கா, தா. பேட்டை அருகே தேரப்பம்பட்டி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், பிரியங்காவின் தந்தை அறிவழகன், நேற்று சரணடைந்தார். அவரை தா.பேட்டை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘பிரியங்கா திருமணத்துக்கு பிறகும் பலருடன் தொடர்பு வைத்து சுற்றித் திரிவதும், பார்ப்போரிடமெல்லாம் பணம் கேட்பதும் என நடவடிக்கை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனை அறிவழகன் கண்டித்தும் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த 21ம் தேதி பிரியங்கா, தந்தை அறிவழகனுக்கு போன் செய்து தான் நாமக்கல்லில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறியிருக்கிறார். அங்கு சென்ற அறிவழகனிடம், ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அவர் கடன் வாங்கி தருவதாக பைக்கில் ஏற்றி சென்று தேரப்பம்பட்டி வனப்பகுதியில் வைத்து கடுமையாக தாக்கி உள்ளே இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என தெரிவித்தனர்.