மனைவியை வெட்டிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை

இடைப்பாடி: இடைப்பாடி அருகே மனைவியை கத்தியால் வெட்டிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே இருப்பாளி வேப்பமரத்தூரை சேர்ந்தவர் சின்னமுத்து(60). தறி அச்சு பிணைக்கும் தொழிலாளி. இவரது மனைவி கந்தாயி. ஒரு மகள், 2 மகன்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கந்தாயி அருகில் உள்ள பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

நேற்று முன்தினம், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னமுத்து, கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கை விரலில் காயமடைந்த கந்தாயி இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், சின்னமுத்து புலம்பி வந்துள்ளார். தூக்கு போட முயன்றவரை உறவினர்கள் மீட்டனர். நள்ளிரவில் அனைவரும் தூங்கியதும், சின்னமுத்து மீண்டும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!