நேற்று முன்தினம், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சின்னமுத்து, கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கை விரலில் காயமடைந்த கந்தாயி இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், சின்னமுத்து புலம்பி வந்துள்ளார். தூக்கு போட முயன்றவரை உறவினர்கள் மீட்டனர். நள்ளிரவில் அனைவரும் தூங்கியதும், சின்னமுத்து மீண்டும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.