76 வயதாகும் மனைவியை கொலை செய்த 84 வயதாகும் கணவர்: கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே 76 வயதான மனைவியை, 84 வயதாகும் கணவர் சுத்தியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி புளோராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மனைவியை, கணவர் சாம் அலெக்ஸாண்டர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்