போதையில்தான் அவ்வாறு கூறுகிறார் என்று மனைவி அஜாக்கிரதையாக இருந்தபோது நிஜமாகவே கூவத்தில் குதித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உடனே கொடுங்கையூர் போலீஸ்காரர்கள் விஜயகாந்த், செல்வகுமார் ஆகியோர் விரைந்துவந்து ஏணியை ஆற்றின் உட்புறமாக செலுத்தி அதன் வழியாக போலீசார் கூவத்தில் இறங்கி பாதி மயக்கத்தில் இருந்த நாகராஜை மேலே கொண்டுவந்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.