வெள்ளைப்படுதல் உஷார்…

பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது வெள்ளைப்படுதல். இது எதனால் ஏற்படுகின்றது மற்றும் இது ஏற்படுவதால் பெண்களுக்கு உடல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழும் , வீட்டிலேயே சுலபமாக இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன என்று பார்க்கலாம்.

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு வழியே வெண்ணிறமான நீர்மம் வெளிப்படுதலாகும். இதனை வெள்ளைப்படுதல் என்று குறிப்பிடுகின்றார்கள். தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும் கூட பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்படலாம்.பாதிப்பில்லாத இந்தவெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாள்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும் கர்ப்பமான காலங்களிலும் ஏற்படும்.

தொற்றினால் ஏற்படக்காரணம்?

பாதுகாப்பற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பின்பற்றாமல் உறவு கொள்வதால் இத்தகைய தொற்று பாதிப்புகள் ஏற்படும். இதனால் பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது புண், அரிப்பு, கொப்புளங்கள் வரும். இதை சரிசெய்யாவிட்டால் கர்ப்பப்பைக்குத் தொற்று பரவும். பழுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்தில் திரவம் வெளியேறினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அரிப்புடன் வெள்ளைப்படுதல் என்பது ஈஸ்ட் பாக்டீரியா தொற்றால் உண்டாகும் வெள்ளைப்படுதல். பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய தொற்றுக்கும் சிறுநீர்த் தடத் தொற்றுக்கும் தொடர்பு உண்டு. பிறப்புறுப்புத் தொற்று, சிறுநீர்த் தடத் தொற்றாக மாறலாம். சிறுநீர்த் தடத் தொற்று பிறப்புறுப்புத் தொற்றாக ஆகலாம். எதுவாக இருந்தாலும் சிகிச்சை பெறுவது அவசியம். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக்கொள்வது. அதிகப்படியான வியர்வை வரும்போது, பருத்தி உள்ளாடைகள் இல்லாமல் நைலான் உள்ளாடைகள் அணிவது. சிறுநீர்த் தடப் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது.

பரிசோதனைகள்

வெள்ளைப்படுதலின்போது வெளிப் படும் திரவத்தை பரிசோதனைக்குஉட்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக வெள்ளைப்படுதல் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக மகப்பேறு நிபுணர் அல்லது மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.

அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
பிறப்புறுப்பில் ஒவ்வாமை
பிறப்புறுப்பில் புண் அல்லது
கொப்புளங்கள்
உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி, இவைகள் இருக்கும்.

வீட்டிலேயே வைத்தியம்

பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம். பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது நல்லது. வாரத்திற்கு ஒரு முறை உள்ளாடைகளை தவிர்த்து விடுவதும் கூட வெள்ளைப்படுதலை கட்டுக்குள் கொண்டு வரும். சிலருக்கு கிட்டத்தட்ட மாதவிடாய் கால இரத்தப்போக்கு போல இந்தவெள்ளைப்படுதல் பிரச்னையைக் கொடுக்கும். இதனால் எந்நேரமும் ஈரமாக இருக்கும் சூழல் இருப்பதால் தொற்று இன்னும் அதிகரிக்கலாம். என்பதால் உள்ளாடையில் பயன்படுத்தக் கூடிய பேன்டி லைனர்களைப் பயன்படுத்தி அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம்.

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து தொடர்ந்து 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 500 மி.லி வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து நீர் குளிர்ந்த பிறகு குடிக்கலாம்.வெண்டைக்காயை தயிருடன் சேர்த்து ஊறவைத்து சாப்பிடலாம். உருண்டை மல்லியை நீரில் இரவில் ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
அரிசி வடித்த கஞ்சி குடித்து வரவெள்ளைப்படுதல் குணமாகும். மேலும் பெரிய நெல்லிக்காய், துளசி, இவைகளை அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். நிறைய தண்ணீர் குடிப்பது எக்காலத்திலும், எந்த உடல் பிரச்னைக்கும் நல்ல மருந்து.
– கவிதா பாலாஜிகணேஷ்

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?