தூத்துக்குடி: வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 40ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் வணிகர்கள் கடையடைத்துள்ளனர். வெள்ளையன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை கிராமத்தில் நடைபெறுகிறது.