நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு..!!

திருச்சி: திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு பெற்றது. சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனையை முடித்துவிட்டு சாட்டை துரைமுருகன் மனைவியிடம் சம்மன் கடிதத்தை கொடுத்துவிட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பெயரில் பல்வேறு நாடுகளில் இருந்து நிதி திரட்டியதாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடந்தது.

 

Related posts

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்