Friday, September 20, 2024
Home » கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றபோது கணவன் இழுத்ததில் கீழே விழுந்து மனைவி பலி

கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றபோது கணவன் இழுத்ததில் கீழே விழுந்து மனைவி பலி

by Ranjith

ஸ்ரீபெரும்புதூர்: கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற மனைவியை பிடித்து இழுத்ததில், கீழே விழுந்து மனைவி பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில், கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பை அடுத்த காந்தி நகர், 12வது தெருவை சேர்ந்தவர் சிவா (30). இவரது மனைவி பூமாதேவி (26). இவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு, லோகேஷ்வரி (8) என்ற மகளும், சதீஷ் (6) என்ற மகனும் உள்ளனர். சிவா கொத்தனார் வேலையும், பூமாதேவி சித்தாள் வேலையும் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமாதேவிக்கும், படப்பை ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் சுந்தருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியின் கள்ளத் தொடர்பு குறித்து சிவாவிற்கு தெரியவந்தது. இதனால், கணவன் – மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காந்தி நகரில் பூமாதேவியும், படப்பை பெரியார் நகரில் சிவாவும், தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு பூமாதேவி, கள்ளகாதலன் சுந்தருடன் பைக்கில் சென்றுள்ளார். இதனை கண்ட, பூமாதேவியின் கணவன் சிவா தனது பைக்கில், அவர்களை பின்தொடர்ந்து, விரட்டிச்சென்று, மனைவி பூமாதேவியை பிடித்து இழுத்தார்.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பூமாதேவிக்கு, பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட, கள்ளக்காதலன் சுந்தர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர், தலையில் பலத்த காயமடைந்த மனைவியை, சிவா தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, சிகிச்சைக்காக படப்பை அடுத்த சாலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பூமாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில், மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூமாதேவி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்த பூமாதேவியின், கணவர் சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

9 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi