டெல்லி: பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் அதிகாரம் பெறும்போது நாடு வலிமை பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெண்களே முன் வந்து புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் என்று பிரதமர் தெரிவித்தார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணெனியில் உரையாற்றினார்.