சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இணையவழி சூதாட்ட தடைசட்டத்தை நீக்க கோரி விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக அரசு கூறுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.