விக்கெட் கீப்பர் பரத்திற்கு கல்தா கொடுக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் இஷான்கிஷன் இடம்பிடிப்பார். ரிஷப் பன்ட் இல்லாத நிலையில் மற்றொரு விக்கெட் கீப்பராக சகாவை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. சர்ப்ராஸ்கான், சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. பவுலிங்கில் உமேஷ் யாதவிற்கு பதில் முகேஷ்குமாருக்கு இடம் கிடைக்கும். முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
இதனிடையே ஆல்ரவுண்டர் ஹர்திக்பாண்டியாவை டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. கடைசியாக அவர் 2018ம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட்டில் ஆடினார். காயத்தில் இருந்து அவர் மீண்டுள்ள நிலையில் 5 ஆண்டுக்கு பின் அவர் மீண்டும் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. இருப்பினும் 50 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவரை தேர்வு செய்வதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள பேட்டியில், “ஒரு தோல்வி எந்த வீரரின் திறமையையும் முடிவு செய்திடாது. புஜாரா, ரோகித் சர்மா இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம். கோஹ்லிக்கு 34 வயது தான் ஆகிறது. அவரும் தொடர்ந்து விளையாட வேண்டும். அணியில் ரிசர்வ் வரிசையில் பலம் மிக்க வீரர்கள் இருக்கின்றனர். அணியின் எதிர்காலமும் பலம் மிக்கதாகவே இருக்கிறது. ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணிக்குள் வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.