அப்போது, திரிணாமுல் தொண்டர்களால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். காயமடைந்த 3 அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே விவகாரம் தொடர்பாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் போங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சங்கர் ஆதியா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சுமார் 17 மணி நேரம் இச்சோதனை நடந்த நிலையில் இங்கும் அமலாக்கத்துறையினர் வந்த வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதைத் தொடர்ந்து, சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகான் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.