இந்நிலையில், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் உள்ள வட்டார அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு சென்றவர்கள் மீது சிலர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், ஒருவர் பலியானார். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலிம் கூறுகையில்,‘‘ சோப்ரா வட்டார அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில்,படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்’’ என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.