பின்னால் சென்ற சரக்கு ரயிலின் லோகோ பைலட் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரு சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில், சுமார் 12 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்பு பணிகள் நிறைவு பெறும் வரையில் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.