சென்னை, கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதன் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 7ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.