மரகதம் குமரவேல் எம்எல்ஏ புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிலாவட்டம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜ் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சி செயலர் ராஜசேகர் நன்றி கூறினார். முன்னதாக மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள தேவதர் ஊராட்சியில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை, சாலையூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் புளிக்கொரடு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.