வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. முகூர்த்த நாள், வார இறுதிநாட்களை ஒட்டி பிப் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பிப். 8-ம் தேதி கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, திருப்பூருக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்