வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28, 29, 30-ல் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படும். குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூன் 28ல் 265 பேருந்துகளும், ஜூன் 29ல் 320 பேருந்துகளும் வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருவுக்கு ஜூன் 28ல் 65 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்

ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது

லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்