பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்தரன் அளித்த பேட்டி: ஆளுநர் பேசும் போது, அரசாங்கம் எழுதி கொடுத்ததைதான் வாசிக்க வேண்டும் என்பது மரபுதான். ஏற்கெனவே தமிழ்த்தாய் வாழ்த்துடன் நாட்டுபண் இசைக்க வேண்டும் என்று கடந்தாண்டே சபாநாயகருக்கு கடிதம் மூலம் ஆளுநர் தெரிவித்திருந்தார். முதல் இரண்டு பத்திகளை வாசித்து விட்டு நாட்டுபண் வாசிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லிவிட்டு அமர்ந்து விட்டார். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து மரபுப்படியே புறப்பட்டுச் சென்றார். முறைப்படி நடந்த கூட்டம் என்பதால் பாஜ வெளிநடப்பு செய்யவில்லை. கோட்சே, சாவர்கர் பெயரை குறிப்பிட்டதை கண்டிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.