வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் காலை 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்துவயலில், பினாங்கோடு, நென்மேனியில் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். கண்டத்தட்டு நகர்வதால் ஏற்படும் நிலஅதிர்வு அல்ல என்று தேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.