வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு செல்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு மக்களவைத் தொகுதியில் வென்ற ராகுல் காந்தி பின்பு ராஜினாமா செய்திருந்தார். வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.