இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற திரு.கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த கல்யாணகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இவர் சூரல்மலையில் உள்ள சிவன் கோவிலில் தங்கி அர்ச்சகராக வேலை செய்து வந்துள்ளார். நிலச்சரிவில் சூரல்மலையில் உள்ள சிவன் கோவிலும் மண்ணில் புதைந்தது. பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த கல்யாணகுமாரின் உடல் மீட்கப்பட்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.