வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 224ஆக உயர்ந்துள்ளது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 225 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. வயநாடு அருகே மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்புப் பணிகளுக்காக கூடுதலாக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.