திருவனந்தபுரம்: கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவால் ஏற்பட்ட பீதியில் இருந்து இன்னும் அப்பகுதி மக்கள் மீளவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து மீட்புப்பணி நடக்கும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கையிலிருந்து 25 கிமீ தொலைவிலுள்ள பல பகுதிகளில் நேற்று லேசான நில அதிர்வும், பூமிக்கடியில் இருந்து முழக்கமும் கேட்டது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.