வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு சூரல்மலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மக்களை மீட்க ராணுவத்தினர் கட்டிவரும் பெய்லி பாலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆறுதல் கூற உள்ளார்.