ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்கள் உள்பட மீட்புப் படையினரும், உள்ளூர் மக்களும் மேற்கொண்டு வரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கது. நான் அங்கமாக உள்ள மெட்ராஸ் பட்டாலியன் இங்கு சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். மலைக்கு மேலே சென்று பார்த்தபோது தான் இந்த நிலச்சரிவின் பாதிப்புகள் எனக்குத் தெரியவந்தது.
என்னுடைய பெற்றோரின் பெயரில் செயல்பட்டு வரும் விஷ்வ சாந்தி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.3 கோடி வழங்கப்படும். நிலச்சரிவால் உருக்குலைந்த இங்குள்ள பள்ளியை சீரமைத்து தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.