தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்பட 1500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். வயநாடு மாவட்டத்தில் இதற்காக சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவந்து உடற்கூராய்வு செய்யும் இடத்தில் காவல்துறை, சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மட்டுமே இருக்கவேண்டும்.
மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அந்த பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.