சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கு 3 அடி மட்டுமே உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் ஆடிப் பெருக்குக்காகவும் தற்போது விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து தொடர்ந்தால் இன்று இரவு அல்லது நாளைக்குள் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.