காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் இருமரம் கிராமத்தின் அருகே புத்தளிமடுவின் குறுக்கே ரூ.3.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கொங்கர்குளம் மற்றும் நூத்துலாபுரம் கிராமம், பாப்பன்குளம் கண்மாய்களுக்கு செங்கட்டான்குளம் கண்மாய் உபரிநீர் வழங்கும் பகிர்மான அணையினை ரூ.1.77 கோடி செலவில் முடிவுற்ற மறுகட்டுமானப் பணி மற்றும் வெள்ளத்தடுப்புச் சுவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கஸ்தூரிரெங்கபுரம் கிராமம் பகுதி 2ல் ரூ.4.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வெள்ளநீர் சூழ்வதை தடுக்கும் வகையில் திருப்பணிகரிசல்குளம் வெள்ள நீரை ரூ.3.79 கோடி செலவில் முடிவுற்ற நெடுங்குளம், மேகமுடையார் குளம் வழியாக சத்திரம் புதுக்குளம் கண்மாய்க்கு திருப்பும் பணி, பெரம்பலூர் வட்டம் விளாமுத்தூர் கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றையும்,
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வடக்கிபாளையம் கிராமத்தில் கோதவாடி ஓடையின் குறுக்கே ரூ.2.68 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் வடக்கு கல்மேடு கண்மாயில் ரூ.1.46 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி வட்டம் பேரூரணி அணைக்கட்டில் ரூ.1.3 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் சம்பன்குளம் ஏரியின் வழங்கு வாய்க்காலின் இடது கரையில் ரூ.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள், திருச்சி மாவட்டத்தில் ரூ.1.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்ட தலைமையிட உபகோட்டத்துடன் புதிய அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.83.19 கோடி செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.