நெல்லை: பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்துவைத்தார். இதன்மூலம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் 18,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். தேவைக்கு ஏற்ப சுழற்சி முறையில் 105 நாட்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.