இதனை தொடர்ந்து செய்து வந்தால் 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர்தான் சிறந்தது. அப்போது சூடான நீரை பயன் படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக் கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம். இரவில் முகம் கழுவி விட்டு எந்த கிரீம்களும் பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டொரு முறை சருமத்தை இப்படி கிரீம்கள் பூச்சுகள் இல்லாமல் விடு வதும் செல்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் சருமத் துவாரங்கள் புத்துணர்வு பெறும். பொதுவாகவே இரவில் உறங்கும் முன் எவ்வித கிரீம்களும் இல்லாமல் தூங்குவதே சருமத்திற்கு நல்லது. அதீத வறண்ட சருமம் எனில் சிறிது பாதாம் எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். காலையில் எழுந்தவுடன் நீரை வாரி இறைத்து முகத்தைக் கழுவினால் சருமசெல்கள் தூண்டப் பட்டு புத்துணர்வான உணர்வு கிடைக்கும். மேலும் முகத்தில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
– பா. பரத்