நீர் ஆரோக்கியம்!

எத்தனையோ விலையுயர்ந்த கிரீம்களும், அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தியும் கூட சிலருக்கு முகப்பொலிவு என்பது தண்ணிபட்ட பாடாகவே இருக்கும். ஆனால் எளிமையான நீரின் மூலமே பல சருமப் பிரச்னைகளை சரி செய்ய முடியும். முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும். இவற்றால் சருமத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளி யேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத் துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்து விடும். ஆகவே குளிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் ேசாப்புகளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.அதீத வெயிலில் சென்று திரும்பினால் முகத்தை சுத்தமான துணியால் சூடான நீரில் நனைத்து பிழிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும்போது, அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்தும் முகத்தில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் கொடுத்தது போல் இருக்கும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர்தான் சிறந்தது. அப்போது சூடான நீரை பயன் படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக் கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம். இரவில் முகம் கழுவி விட்டு எந்த கிரீம்களும் பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டொரு முறை சருமத்தை இப்படி கிரீம்கள் பூச்சுகள் இல்லாமல் விடு வதும் செல்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் சருமத் துவாரங்கள் புத்துணர்வு பெறும். பொதுவாகவே இரவில் உறங்கும் முன் எவ்வித கிரீம்களும் இல்லாமல் தூங்குவதே சருமத்திற்கு நல்லது. அதீத வறண்ட சருமம் எனில் சிறிது பாதாம் எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். காலையில் எழுந்தவுடன் நீரை வாரி இறைத்து முகத்தைக் கழுவினால் சருமசெல்கள் தூண்டப் பட்டு புத்துணர்வான உணர்வு கிடைக்கும். மேலும் முகத்தில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
– பா. பரத்

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது