Sunday, September 29, 2024
Home » வாட்ச்மேனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு: வாலிபர் கைது

வாட்ச்மேனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு: வாலிபர் கைது

by Ranjith

ஆவடி: திருவமுல்லைவாயல் அருகே வாட்ச்மேனை கத்தியால் கண்ணத்தில் வெட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (62). அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றிவருகிறார். இவர், கடந்த 13ம் தேதி வேலையை முடித்துவிட்டு, இரவு 11 மணி அளவில் மாநகர பேருந்தில் ஏறி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாய்பாபா பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் சங்கரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

பணத்தை தர மறுத்ததால் அந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் இடது பக்க கண்ணம் அருகே வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.3,500 பணத்தை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டார். அக்கம் பக்கத்தினர் ரத்த காயத்துடன் கிடந்த சங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலைய போலீசார், சம்பவம் நடந்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (22), என்பவரை நேற்றுமுன்தினம் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi