சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால், குற்ற சம்பவங்களை கண்காணிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் முக்கிய பகுதிகளில் 22 டவர்கள் அமைத்து, போலீசார் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டிரோன் கேமரா மூலமும் மார்க்கெட் வளாகம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.