போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐக்கிய அரசு நாடுகளை கேட்டுக் கொண்டார். தற்போது அதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா அரசு செய்து வருகிறது. இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சார்பில் உயர்மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் இந்த போர் நிறுத்த மாநாட்டில் ரஷ்ய பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.