4 ஆண்டாக தேடப்பட்ட கொள்ளையன் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு செல்போன் டவரில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகளை திருடிய வழக்கில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த உதயசங்கரை (35), அரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த உதயசங்கர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 4 ஆண்டாக தலைமறைவானார்.

அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், செல்போன் சிக்னலை வைத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கி இருந்த உதயசங்கரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related posts

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பயங்கர தீ

ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: ஐகோர்ட்