நேற்று மாலை, கட்டிடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் குத்தி இடிக்கும் போது, எதிர்பாராதவிதமாக பழமையான சுவர் இடிந்து அண்ணாமலை, ரவி ஆகியோர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த மகராஜகடை போலீசார், இருவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.