இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்த போது பிஜூ ஜனதா தள எம்பிக்களும் ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அக்கட்சி மூத்த எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘ஜனாதிபதி உரையிலும், பிரதமர் மோடியின் பதிலிலும் ஒடிசா மாநில மக்களின் கோரிக்கைகள் விருப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை’’ என்றார். அதே சமயம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி விஜயசாய் ரெட்டி, எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பிஜூ ஜனதா தளத்திற்கு 9 எம்பிக்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 11 எம்பிக்களும் உள்ளனர். மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 எம்பிக்களை வைத்துள்ளது.