இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் கொலையான சரவணனுக்கும் புலிப்பாக்கம் காந்தளூர் பகுதியைச் சேர்ந்த பாளையம் அவரது மகனான முத்து என்பவரக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பு தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது.
அதில் முதலில் யார் தண்ணியை பிடிப்பது என்ற போட்டி ஏற்பட்டது. பின்பு ஒரு கட்டத்தில் சண்டையாக முடிந்தது. இதனால் காத்திருந்து பழிக்குப்பழி தீர்க்க சரவணனை கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.இதனை அடுத்து முத்துவை கைது செய்த தாலுக்கா போலீசார் நீதிமண்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.