இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சியில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், இங்குள்ள பழைய பேரூராட்சி அலுவலகம் எதிரே பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பூங்கா பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டபோது பராமரிக்கப்பட்டது. தற்போது, இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்களும், குடிமகன்களின் கூடாரமாகவும், கால்நடைகள் தஞ்சமடையும் இடமாகவும் மாறி உள்ளன. இந்த பூங்கா அமைந்துள்ள இடம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் – ஒரகடம் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது தற்போது இரவு நேரங்களில் இங்கு காதல் ஜோடிகளின் அத்து மிரல்கள் இந்த வழியாக செல்லும் பொது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள நூலகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. காலையில் நூலகத்திற்கு வரும் ஊழியர்கள் முகம் சுளித்து, இங்குள்ள காலி மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் நிலை காணப்படுகின்றன. இதுபோன்ற நிலையில் வாலாஜாபாத் காவல்துறையினர் இப்பகுதியில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் காதல் ஜோடிகள், மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து முதியவர்களும், குழந்தைகளும் பயன்படுத்தும் வகையி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.