முகாமில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் சிகிச்சை, பல் சிகிச்சை, சித்த மருத்துவம் உள்ளிட முழு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 61 ஊராட்சிகளை சார்ந்த 276 தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய்காந்தி அமலிசுதாமுனுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், காஞ்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவக் குழுவை சார்ந்த செவிலியர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.