அதன்படி நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தென்னேரி உள்வட்டத்தை சேர்ந்த தோனான்குளம், தேவரியம்பாக்கம், தாழையம்பட்டு, அளவூர், வாரணவாசி, ஆம்பாக்கம், கட்டவாக்கம், அத்திப்பட்டு, மஞ்சமேடு, அகரம், விளாகம், அயிமிச்சேரி, கோவளவேடு, நாவெட்டிக்குளம், குண்ணவாக்கம், தென்னேரி, மடவிளாகம், வேண்பாக்கம், பெரிய மதுரப்பாக்கம், சின்ன மதுரப்பாக்கம் கிராமத்தை சார்ந்த பொதுமக்களிடம் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.
இவ்வாறு, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவரியம்பாக்கம் கிராமத்தை சார்ந்த 3 பயனாளிகளுக்கும், வேண்பாக்கம் கிராமத்தை சார்ந்த 1 பயனாளிக்கும் பட்டா மற்றும் பெயர் மாறுதல் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.