இதில், சென்னை மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் கலந்துகொண்டு, தொல்லியல் மற்றும் கல்வெட்டுகள் குறித்து வரலாற்று ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து அதற்கான விளக்கத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, மூத்த தொல்லியல் அறிஞர் வீரராகவன் பழங்கால கல்வெட்டுகளை எவ்வாறு படிப்பது என விளக்கி கூறினார். பின்னர் பழையசீவரம், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளுக்கு வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், ஆர்வலர்களை அழைத்துச்சென்று கல்வெட்டுக்களையும், வரலாற்று சின்னங்களையும் காண்பித்து காஞ்சிபுரம் அருங்காட்சியகம் காப்பாற்றிய உமாசங்கர் தொல்லியல் அறிஞர் மங்கையர்கரசி வீரராகவன் ஆகியோர் கள ஆய்வில் விளக்கி கூறினர். இந்நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர்கள் கொற்றவை ஆதவன், மோகன கிருஷ்ணன், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வம் கொண்ட இளம் தலைமுறைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.