2022ம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4கோடியே 60லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.439.16 கோடி கிடைத்ததாகவும், 2023ம் ஆண்டில் 5கோடியே 26லட்சம் டிக்கெட்டுகள் பயணிகள் ரத்து செய்ததில் ரூ.505 கோடி கிடைத்ததாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் மூலம் ரூ.43கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. ரயில் பயணத்தை பயணிகள் அதிகம் விரும்பும் நிலையில் தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததையே இது காட்டுகிறது. மேலும், 720 இருக்கைகள் உள்ள ஒரு ரயிலுக்கு 600 இருக்கைகள் வரை காத்திருப்பு பட்டியலை வழங்குவது ஏன்? எனவும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.