மதுரை: வைகை அணையில் இருந்து தொடர்ச்சியாக திறக்கப்படும் நீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனாட்சி கல்லூரி – செல்லூர் சாலை, ஆழ்வார்புரம் ஆரப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.